search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பை தொட்டி"

    • பொங்காளி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
    • குப்பை தொட்டி வைத்தது, கோவிலின் புனித தன்மையை கெடுக்கும் வகையில் உள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவை-பொள்ளாச்சி ரோடு குறிச்சி குளக்கரையில் பொங்காளி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். வாராவாரம் வெள்ளிக்கிழமை அன்று, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.

    கோவையை காக்கும் கோனியம்மன் என்பது போன்று, குறிச்சி, சுந்தராபுரம் பகுதி மக்களை காக்கும் குறிச்சி பொங்காளியம்மன் என்று பக்தர்களால் இந்த கோவில் போற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த கோவிலின் முன்பு, மாநகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூறியதாவது:-

    குறிச்சியில் அமைந்துள்ள பொங்காளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன். இந்த வழியே செல்லும் அனைவரும் இந்த கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டே செல்வார்கள்.

    இந்நிலையில் கோவிலுக்கு முன்பாக அம்மனின் கருவறைக்கு நேர் எதிரே குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியாக உள்ளது.

    கோவில் முன்பு குப்பை தொட்டி வை த்தது, கோவிலின் புனித தன்மையை கெடுக்கும் வகையில் உள்ளது. எனவே கோவில் கருவறைக்கு நேர் எதிரே வைக்கப்பட்டிருக்கும் அந்த குப்பைத் தொட்டியை அகற்றி, குளத்தை ஒட்டி வைத்தால், கோவிலின் புனித தன்மை பாதுகாக்கப்படும். கோவிலின் முன்பாக சிதறி கிடக்கும் குப்பைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒரு வழியாகும். எனவே கோவை மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கிராமங்களில் சுகாதார சீர்கேட்டை தவிர்க்க, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
    • மக்கள் தொகை அடிப்படையில், வழங்கிய தொட்டிகளை தேவையான இடத்தில் வைக்கவில்லை.

    உடுமலை :

    அரசு நிதியில் வழங்கப்பட்ட குப்பைத்தொட்டிகளை, பயன்பாடு இல்லாமல், வீசி எறிந்துள்ள ஊராட்சி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

    மத்திய, மாநில அரசுகள் சார்பில், கிராமங்களில் சுகாதார சீர்கேட்டை தவிர்க்க, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. திட்டத்தின் கீழ் ஊராட்சிகள்தோறும், தள்ளிச்செல்லும் வகையிலான குப்பைத்தொட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மக்கள் தொகை அடிப்படையில், வழங்கிய தொட்டிகளை தேவையான இடத்தில் வைக்கவில்லை. படிப்படியாக இந்த குப்பைத்தொட்டிகள் பயன்பாடு இல்லாமல், குப்பையில் போடப்பட்டு ள்ளன. பல கிராமங்களில், குப்பைத்தொட்டிகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி, காணாமல் போயுள்ளன. இதனால், திறந்தவெளியில், குப்பை கொட்டுவது அதிகரித்துள்ளது.

    ஒவ்வொரு ஊராட்சிக்கும், பல லட்சம் ரூபாய் அரசு நிதியில், வழங்கப்பட்ட குப்பைத்தொட்டிகளின் அவல நிலை குறித்து, மண்டல அலுவலர்கள், ஒன்றிய அதிகாரிகள் உள்ளிட்ட எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. படிப்படியாக அனைத்து குடியிருப்புகளிலும், குப்பை தொட்டியே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. திறந்தவெளியில் கொட்டும் குப்பையை தீ வைத்து எரித்து, கடமையை முடித்து கொள்கின்றனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் அனுப்பியுள்ள மனுவில், 'குடிமங்கலம் ஒன்றியம், கொங்கல்நகரம் உள்ளிட்ட பல ஊராட்சிகளில், குப்பைத்தொட்டிகள் பயன்பாடு இல்லாமல், உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் முற்றிலுமாக பின்பற்றப்படுவதில்லை. அலட்சியமாக செயல்பட்டு வரும் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.

    • பல உட்புற தெருக்களில் குப்பைகளை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே அள்ளுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
    • சுமார் 250 தெருக்களில் 100 தெருக்களுக்கும் மேலாக குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

    சென்னை:

    பார்க்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் நிலைமை சரியில்லையே என்று சொல்லும் அளவுக்கு சென்னை மாநகராட்சியின் குப்பை கழிவுகள் மேலாண்மை இருப்பதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

    சென்னை மாநகரை பொறுத்தவரை தினமும் லட்சக்கணக்கான டன் குப்பைகள் குவிகிறது. இவற்றை அகற்றுவதும், கையாள்வதும் சவாலான பணிதான். சேகரிக்கும் குப்பைகளை எளிதாக பிரிப்பதற்காக மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தனித்தனியாகவும் சேகரிக்கப்படுகிறது.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் துறை இணைந்து குப்பை கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவது பற்றிய விழிப்புணர்வு குறும் படங்களை தயாரித்துள்ளது. நடிகர் யோகிபாபு, ரோபோ சங்கர், ரெடின் கிங்ஸ்வி ஆகியோர் நடித்த 4 விழிப்புணர்வு வீடியோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    குப்பைகளை பிரித்து கொட்டினாலே எளிதாக மறுசுழற்சிக்கு உதவும். இதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம் குப்பைகளை பிரித்தெடுப்பதின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரிவித்து வருகிறோம் என்றார்கள் திடக்கழிவு மேலாண்மைதுறை அதிகாரிகள்.

    விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்தாலும் சென்னையில் பல இடங்களில் குப்பை தொட்டிகள் நிரம்பி கிடக்கின்றன. பணியாளர்கள் வராததால் குப்பை அள்ளுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    குப்பை தொட்டிகள் நிரம்பிவிட்டதால் சுற்றிலும் குப்பைகள் சிதறி கிடக்கின்றன. அழுகிய பொருட்களால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு விளைவதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். பல உட்புற தெருக்களில் குப்பைகளை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே அள்ளுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    குப்பைகளை கையாள்வதற்கு பணியாளர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் அடுத்த சில மாதங்களில் பலர் ஓய்வு பெறுகிறார்கள்.

    மொத்தமுள்ள 15 மண்ட லங்களில் 11 மண்டலங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது மேலும் திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்களையும் தனியார் வசம் ஒப்டைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அண்ணா நகர் 104-வது வார்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக கவுன்சிலர் செம்மொழி கூறினார். இங்குள்ள சுமார் 250 தெருக்களில் 100 தெருக்களுக்கும் மேலாக குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் 3 நாட்களுக்கு ஒருமுறைதான் குப்பை அள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

    செங்கொடி சங்க பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசலு கூறும்போது, கடந்த 2021-ம் ஆண்டிலேயே 4,600 காலிப் பணியிடங்கள் இருந்தது. கடந்த ஆண்டில் சுமார் 500 பேர் ஓய்வு பெற்றுள்ளார்கள். மாநகராட்சி அதிகாரிகள் காலி பணியிட விவரங்களை வெளியிடவில்லை என்றார்.

    • தாரணி அப்பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றார்.
    • குப்பை தொட்டியில் 4 கால்களும், வாயும் கட்டப்பட்ட நிலையில் ஒரு நாய் கிடப்பதை கண்டார்.

    குனியமுத்தூர்,

    கோவையை அடுத்த கோவைப்புதூர் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் தாரணி(41). இவர் அப்பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றார்.

    அப்போது அருகே உள்ள ஒரு குப்பை தொட்டியில் 4 கால்களும், வாயும் கட்டப்பட்ட நிலையில் ஒரு நாய் கிடப்பதை கண்டார். உடனே திரும்பி வீட்டுக்கு சென்று, தனது மகனை அழைத்துக் கொண்டு அந்த நாயை தூக்கிக் கொண்டு செல்வபுரம் விலங்குகள் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அந்த நாய்க்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த நாய் இறந்தது. பின்னர் அது யாருடைய நாய் என்று விசாரிக்கும் போது, கோவைப்புதூர் பாரதிநகரை சேர்ந்த கிருபாகரன் என்பவர் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் என்பது தெரியவந்தது. எனவே கிருபாகரன் மீது குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபாகரனிடம் விசாரித்து வருகின்றனர்.

    • மதுரை விமான நிலைய குப்பைத்தொட்டியில் தங்ககட்டி கிடந்தது.
    • இது தொடர்பாக கடத்தல்காரர்களை, சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

    அவனியாபுரம்

    துபாயில் இருந்து மதுரைக்கு தினமும் விமான சேவை நடைபெற்று வருகிறது. நேற்று காலை துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் 170 பயணிகள் வந்தனர்.

    இதில் பயணம் செய்த ஒருவர் தன்னிடமிருந்த பேஸ்ட் போன்ற பொருளை குப்பைத் தொட்டியில் வீசி சென்றார். இதனை பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர் கண்டுபிடித்து சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பொருளை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் ரூ.14 லட்சத்து 36 ஆயிரத்து 472 மதிப்புள்ள 281 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விமானத்தில் வந்த பயணியை அடையாளம் காணும் வகையில் வீடியோ பதிவுகளை பார்வையிட்டு கடத்தல்காரரை சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். மதுரை விமான நிலை யத்தில் தங்கத்தை குப்பைத்தொட்டியில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×